தமிழ் பேசுவதும் எழுதுவதும் நாகரிகமற்ற செயல் என்ற அக்காலத்தில் உணர்ச்சியோடு எழுந்து சூரிய நாராயண சாஸ்திரியார் என்ற தம் பெயரை துய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இதிலிருந்தே தெரிகிறது இவர் தமிழ்மேல் எவ்வளவு பற்று வைத்துள்ளார் என்று , இவர் 1870 ஆம் ஆண்டில் பிறந்து வாழ்ந்தவர்.
பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழியை வெளிக்கொணர வேண்டும் என்று எண்ணினார். இனிவளரும் மக்கள் தமிழ் மொழியை நன்கு கற்க வேண்டும் இதன் வரலாறு புரியவேண்டும். இதனால் அனைவரும் பயன்பெறவேண்டும் என்று எண்ணினார்.
பழங்காலத்து நாடக நுல்கள் அனைத்தும் அழிந்து போயின என்று இவரிடம் பல உரையாசிரியர்கள் கூறி வருந்தினர். இதனைக் கண்ட பரிதிமாற் கலைஞர் பல ஏட்டுச்சுவடிகளை கண்டுபிடித்து ஆராய்ந்து ஒருவாறு ஈடுசெய்தார். அவர் " நாடகவியல்" என்னும் நுலைப் படைத்துத் தந்தார்". மான விஷயம் என்னும் நாடகம் ஒன்றையும் இயற்றினார்.
கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழிகள் பலவற்றை ஆராய்ந்து திராவிட ஒப்பியன் நுல் சிளிவிறிகிஸிகிஜிமிக்ஷிணி நிஸிகிவிவிகிஸி ளிதி ஞிஸிமிக்ஷிமிஞிமிகிழி லிகிழிநிஹிகிநிணி) என ஆங்கிலத்தில் நுற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நுல் இயற்றியுள்ளார். அவர்தான் குறிப்பிட்டுள்ளார் தமிழ் மொழி எந்தவொரு மொழியின் துணையின்றித்தானே தனித்தியங்கும் மொழி தமிழ்மொழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின் அவரைப் பின்பற்றி பலர் அவர் வழிசென்றனர்.
பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி வரலாறு என்னும் அழகிய நுலை எழுதினார் ஆனால் சரிபாதி தமிழ்மொழியும் வடமொழியும் கலந்து படைக்கும் நுல்களை அவர் வெறுத்தார். இவர் படைத்த தமிழ்மொழி வரலாறு நுல் முற்றிலும் துய தமிழ் மொழியிலேயே படைத்துள்ளார். இந்நுலே தமிழ்மொழி வரலாறு பற்றிய முதல் நுலாக இதுவாகவே இருக்கலாம்.
தமிழ்மொழியும், வடமொழியும் கலந்து எழுதிய நுல்களை 'ஆபாச பாஷை' என அவர் கூறினார். எனவே இவர் எல்லோரையும் விடவும் தனித்தமிழ் பற்றாளர் என்று கூறலாம். மதிவாணன் என்பது இவரின் மற்றோரு படைப்பு இவர் 1900 ஆண்டில் இயற்கை எய்தினார்.