| முட்டாள் ஜோக்ஸ் 7 |
|
| |
ஒருவர் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது
மற்றொருவர் : ஏன் ?
ஒருவர் : எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு |
ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.
மாணவன் : பி, சி, டி, இ, எப்,....
ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.
மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார். |
கோபு : இந்த ஸ்பிரே வாசம் பிணத்துக்கு அடிக்கிறமாதிரி இருக்குது..?
பாபு : அது 'பாடி ஸ்பிரே' அப்படிதான் இருக்கும்.. |
நண்பர் 1 : மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.
நண்பர் 2 : மொழிப் போராட்டமா ?
நண்பர் 1 : தேன்மொழியைக் கெடுத்துட்டான். |
அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா? |
முட்டாள் கோபு : நேரு ரொம்ப மோசமான ஆளு..எப்படி சொல்றீங்க..?
முட்டாள் பாபு : அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே.. |
நீதிபதி : எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.
குற்றவாளி : முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன் |
டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு. |
| |
|