New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » பதினெண் கீழ்கணக்கு »
சேனல்கள்
இணைப்புகள்

திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)

 
 
 

குறிப்பு :-

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார்.

நூல்

1. குறிஞ்சி

நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. (1)

சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். (2)

சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியொழா ஆர்த்து. (3)

கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். (4)

வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! (5)

மானீல மாண்ட துகில்உமிழ்வ(து) ஒத்தருவி
மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய். (6)

கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். (7)

அவட்காயின் ஐவனம் காவல் அமைந்த(து)
இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண்(டு) ஈத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை. (8)

வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்(து) அன்(று)என்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம். (9)

கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி
பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்
தேன்வார்க்(கு) ஓக்கும் மலை நாட! வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி. (10)

கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா ஒரு நீ - இரவின்
வழிகள்தாம் சால வரஅரிய வாரல்
இழிகடா யானை எதிர். (11)

வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்(கு) ஈக பழியிலாள் - பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்(கு) அல்லால்
நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. (12)

ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள்
ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாதும்சேர் காடு. (13)

வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக்
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள். (14)

வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து. (15)

நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம்
என்றேன் இரண்டாவ(து) உண்டோ மடல் மாமேல்
நின்றேண் மறுகிடையே நேர்ந்து. (16)

அறி(கு)அவளை ஐய இடைம்மடவாய் ஆயச்
சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். (17)

என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. (18)

பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்(து)என்
நெஞ்சம்வாய்ப் புக்(கு)ஒழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான். (19)

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்(கு)
என்னையோ நாளை எளிது. (20)

பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்(கு)
அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்(று)ஆற்றான்
உண்கண்ணி வாடாள் உடன்று. (21)

கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம்
ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பி னால்எய்தாய் இன்று. (22)

பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணா(து)
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏண்அழிதற்(கு) யாமே இனம். (23)

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்(து)உழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு. (24)

கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்திஇரா. (25)

கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி. (26)

பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)

மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில்
நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக
எறிந்(து)உழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
அறிந்துழல்வான் ஓ!இம் மலை? (28)

பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர்
நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தான்நாறத் தாழ்ந்த இடம். (29)

திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு. (30)

தன்குறையி(து) என்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு. (31)

2. நெய்தல்

நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு. (32)

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா(து)
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம். (33)

தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம்
காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து. (34)

புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப!
நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக்
கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம்
மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. (35)

முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்(து)இரை கொள்ளாது - உருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற! (36)

ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாரா(து) அலர்ஒழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து. (37)

மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்(பு)அணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய்
என்போலும் துன்பம் நினக்கு. (38)

தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. (39)

தன்துணையோ(டு) ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன்துணையோ(டு) ஆட இயையுமோ? - இன்துணையோ(டு)
ஆடினாய் நீயாயின் அந்நோய்க்(கு)என் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து. (40)

உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோ(டு) உருமுடைத்தாய் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து. (41)

கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (42)

கடற்கோ(டு) இருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா! (43)

கடும்புலால் புன்னை கடியும் துறைவ!
படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம்
தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில்
எழைமான் நோக்கி இடம். (44)

தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் - ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்! (45)

தந்(து)ஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற்(று) - எந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா. (46)

பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார். (47)

திரை மேற்போந்(து) எஞ்சிய தெள்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து. (48)

எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!-
பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு
நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. (49)

திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியால்நீ கொள்வது நேர். (50)

கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று. (51)

திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். (52)

பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத்
தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர்
முன்கிளர்ந்|(து) எய்தல் முடி! (53)

வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர்
கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர்
நாள் நாடி நல்குதல் நன்று. (54)

கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும்
ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள்
ஏறுநீர் வேலை எதிர். (55)

கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட
அடற்கானல் புன்னைதாழ்ந்(து) ஆற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்(து)எம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து. (56)

வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா வளமை - இருதிரை
முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!
என்வீழல் வேண்டா இனி. (57)

மாயவனும் தம்முனும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று? (58)

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். (59)

திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்
கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள். (60)

அறி(கு)அரி(து) யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து. (61)

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்!
உவர்கத்(து) ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச்
சுவர்கத்(து) உளராயின் சூழ். (62)

3. பாலை

நிலம் : குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் : பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.

எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு? (63)

பேணாய் இதன்திறத்(து) என்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்(கு) ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு. (64)

தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து. (65)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து! (66)

வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது! (67)

சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற
இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு! (68)

அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தான்இவ் அணியிழையோ(டு) - ஒத்த
தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. (69)

நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்டல் அயர்மணல்மேல் வந்து! (70)

அஞ்சுடர்நள் வாண்முகத்(து) ஆயிழையும் மாநிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். (71)

முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது. (72)

செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம்
தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. (73)

புன்புறவே! சேவலோ(டு) ஊடல் பொருளன்றால்
அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று
அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து
இதுகாண்என் வண்ணம் இனி! (74)

எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெகாப் - புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின் சென்ற ஆறு. (75)

நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம்
அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப்
புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி. (76)

வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால்
வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு? (77)

ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையில் காணா(து) - அருகல்
வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்! (78)

சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால்
நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்! (79)

உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். (80)

கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)

ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று. (82)

செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச்
சிதடி கரையும் திரிந்து. (83)

கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப்போந்(து) எய்யும்
அருளில் மறவர் அதர். (84)

பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை யாக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை. (84)

ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது
அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து
மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. (86)

ஒன்றானும் நா(ம்)மொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்(கு) அரிதாச் சேய சுரம். (87)

அல்லாத என்னையும் தீரமற்(று) ஐயன்மார்
பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து. (88)

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான். (89)

வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக்(கு) ஏறக்கொணருமோ வெல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான். (90)

கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்க வீயும் இடம். (91)

செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக்
கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு. (92)

4. முல்லை

நிலம் : காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.

கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. (93)

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. (94)

மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (95)

இருள்பரந்(து) ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. (96)

பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. (97)

வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (98)

பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. (99)

பண்(டு)இயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்(டு)இயைய மாந்திக்கால் வீழ்த்(து) இருண்(டு) - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். (100)

வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)

மான்எங்கும் தம்பிணையோ(டு) ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. (102)

ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. (103)

ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. (104)

எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்(து)அங்(கு) ஒடுங்கழுத்தம் கொண்டு. (105)

என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்(து)ஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. (106)

கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்த(து) இனி. (107)

கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகா(து) உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. (108)

என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,